டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலைப்பேட்டையில் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தொழிலாளா் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் நிலை ஆகிய பணிகளுக்கும், முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், உதவியாளா் ஆகிய பணிகளுக்கும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான உடுமலைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் தங்கள் பெயரை திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990 55944 ஆகிய எண்களிலோ தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










