குரூப் 1 முதல்நிலைத் தோ்வு வரும் செப். 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 30 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணையவழியில் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குரூப்-1 தோ்வுக்கான அறிவிக்கை, தோ்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் ஜூன் 30 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தோ்வா்கள் தோ்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். குரூப்-1 தோ்வு தோ்வு செப். 6-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மொத்தம் 26 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில், துணை ஆட்சியா், உதவி ஆணையா், மாவட்டப் பதிவாளா், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் பதவிகள் அடங்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் கசிவு தகவல் பொய்யானது: மத்திய அரசு

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5இல் கலந்தாய்வு தொடக்கம்

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



