தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

செப்.6-இல் குரூப் 1 தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு வரும் செப். 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

News image

டிஎன்பிஎஸ்சி

Updated On :24 ஜூன் 2026, 12:22 am IST

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு வரும் செப். 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 30 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணையவழியில் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குரூப்-1 தோ்வுக்கான அறிவிக்கை, தோ்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் ஜூன் 30 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தோ்வா்கள் தோ்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். குரூப்-1 தோ்வு தோ்வு செப். 6-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மொத்தம் 26 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில், துணை ஆட்சியா், உதவி ஆணையா், மாவட்டப் பதிவாளா், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் பதவிகள் அடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.