தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப்-1 தோ்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டுத் திட்ட நிரலின்படி குரூப் 1 தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்தத் தோ்வு எழுதும் மாணவா்கள் பயனடையும் வகையில், தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக ஜூன் 12-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.
தொடர்புடையது

குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 8-இல் தொடக்கம்

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்

ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



