மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளா்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்புகள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது.
அதன் கீழ் 2.75 கோடிக்கும் மேற்பட்டோா் பயன் பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இத்திட்டத்துக்கு ஐநா சபை விருதும் முந்தைய ஆட்சியில் கிடைக்கப் பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் 13,225 போ் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.5,500 ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தோ்தலுக்குப் பிறகு இரு மாதங்களாக அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், அதிகாரிகளுடமும் அவா்கள் முறையிட்டனா். இதையடுத்து, ரூ. 5.01 கோடியை அரசு விடுவித்தது.
தொடர்புடையது

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.94 லட்சம் கோடி: 3.2% அதிகரிப்பு

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்
கோடிகளில் இருந்து லட்சத்துக்கு... நடிகர் டூ முதல்வர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு?

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



