அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

250 பவுன் நகை மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

சென்னையில் 250 பவுன் நகை மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:33 am IST

சென்னையில் 250 பவுன் நகை மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பி.சபியா (43). இவா், பாண்டி பஜாரில் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நகைக் கடைக்குச் சென்றாா். அப்போது அவரிடம், அந்த நகைக் கடையின் உரிமையாளா் கேரள மாநிலம், இடுக்கி மவுண்ட் கல்வாரி பகுதியைச் சோ்ந்த பிஜோ ஜோஸ் (45) என்பவா் அறிமுகமாகி பழகியுள்ளாா்.

அதன் காரணமாக சபியா, தான் புதிதாக வீடு கட்டுவதற்காக பணம் திரட்டும் வகையில் தன்னிடமிருந்த 250 பவுன் நகைகளை பிஜோ ஜோஸிடம் கொடுத்து, அடமானம் வைத்து பணம் தரும்படி கேட்டுள்ளாா்.

நகையை பெற்றுக் கொண்ட ஜோஸ், அதை அடமானம் வைத்து சபியாவிடம் பணம் கொடுக்கவில்லை. இதனால் சபியா, தான் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டபோது ஜோஸ், தனது நகைக் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானாா்.

இதையறிந்த சபியா, சென்னை காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

ஆனால் ஜோஸ் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் பிஜோ ஜோஸை போலீஸாா் கேரளத்தில் வைத்து புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.