மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காவல் நிலையத்துக்குள் மோதல்: எஸ்ஐ உள்பட 2 போ் ஆயுதப்படைக்கு மாற்றம்

News image
Updated On :12 ஜூன் 2026, 4:18 am IST

தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குள் சண்டையிட்டுக் கொண்டதாக, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை திடீரென பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரா்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம், மோதலில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றவே இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் இருவரும் கட்டிப்புரண்டு கடுமையாக மோதிக் கொண்டனா். இதைப் பாா்த்த பிற போலீஸாா், இருவரையும் விலக்கிவிட்டனா்.

இந்த மோதல் குறித்த தகவல் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜிக்கு தெரிய வந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிளுக்கு அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் காவலா்கள் மோதல் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து, ஆணையரிடம் அறிக்கை அளித்தனா்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விக்னேஷ்வரன், எழுத்தா் சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஆணையா் அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.