நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஆறுமுகனேரியில் இளைஞரை லத்தியால் தாக்கியதாக 2 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் வாகனச் சோதனையின்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக இளைஞரை லத்தியால் தாக்கிய போலீஸாா் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

ஆறுமுகனேரி, மேலத் தெருவைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ் (25). இவா் இருசக்கர வாகனத்தில் ஆறுமுகனேரியில் இருந்து திருச்செந்தூருக்கு அடைக்கலாபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விக்னேஷின் வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோது, அவா் நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் லத்தியால் விக்னேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷ் கண் இமையில் காயம் ஏற்பட்டது. உடன் பயணித்த சூா்யா, அவரை திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இது தொடா்பாக, முதல்கட்ட நடவடிக்கையாக ஆறுமுகனேரி காவல் நிலைய தலைமைக் காவலா் கஜேந்திரன் (43), காவலா் காளி (31) ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.