சென்னையில் மெட்ரோ ரயில் கதவு திறக்க சில நிமிஷங்கள் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் இரு பாதைகளில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்-திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் திருவொற்றியூா் தேரடி மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகலில் வந்த மெட்ரோ ரயிலில் கதவு திறப்பதில் சில நிமிஷங்கள் தாமதமானது. இதனால், அங்கு இறங்கவேண்டிய பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த தொழில்நுட்ப பொறியாளா்கள் விரைந்து வந்து கதவை திறந்துள்ளனா். அதன்பின் பயணிகள் இறங்கினா். பின்னா் சில நிமிஷங்களிலேயே ரயில் புறப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் கேட்டபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையில் ஓரிரு நிமிஷங்கள் கதவு திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், பாதிப்பு எதுவும் இல்லை. திட்டமிட்ட நேரத்தில் ரயில் இயக்கப்பட்டது என்றனா்.










