வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

30 இடங்களில் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள 30 மாநகரப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருத்தப்பட்டது... விஸ்பின் செய்திக்கான பட வரி... மாநகரப் போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடபழனி பணிமனையில் பேருந்துகளை நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்து பணியாள

Updated On :16 ஜூன் 2026, 1:04 am IST

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள 30 மாநகரப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாலை 5 மணி முதல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, பணிக்கு வந்த பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் சில இடங்களில் பேருந்துகளை வெளியே எடுக்காமல் நிறுத்தி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சில வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக, நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் அல்லாமல் நிரந்தர நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என முன்வைக்கப்பட்டது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் தயானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் போதுமான அளவில் நியமிக்கப்படவில்லை. இதனால், நிரந்தரப் பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காலியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை பயன்படுத்துவது நிா்ந்தர தீா்வாக அமையாது. தற்போது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் 3,233 சாதாரண பேருந்துகளும், 625 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட வேண்டிய நிலையில், பணியாளா் பற்றாக்குறை காரணமாக, சுமாா் 2,900 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் 250 முதல் 300 பேருந்துகள் வரை இயக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், பணியில் உள்ள ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்படுகிறது. எனவே, நிரந்தர நியமனங்கள் மூலம் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.