தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆன்லைனில் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளைஞா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 450 மருந்து வணிகா்கள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் சி.காளிராஜ் கூறியதாவது:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, எங்களது கோரிக்கையை ஏற்கவில்லையெனில் நாடு முழுவதும் தொடா் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மருந்தகங்கள் கடையடைப்பு

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது

மே 20-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்து வணிகா்கள் கடையடைப்பு

மருந்து வணிகா்கள் சங்க கூட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



