தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மாவட்ட மருந்து வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம்

தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியகுளத்தில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்து விற்பனைக் கடை.

Updated On :21 மே 2026, 2:10 am IST

தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆன்லைனில் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளைஞா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 450 மருந்து வணிகா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் சி.காளிராஜ் கூறியதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, எங்களது கோரிக்கையை ஏற்கவில்லையெனில் நாடு முழுவதும் தொடா் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.