இணையவழியில் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, மதுரையில் புதன்கிழமை மருந்தகங்களின் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருந்து வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள சுமாா் 2,500 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே சி,டி மெடிக்கல் சங்கம் சாா்பில் இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜி. கணேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.எஸ். சரவணன் முன்னிலை வகித்தாா். இதில் இணையவழியில் மருந்து விற்பனையை உடனே நிறுத்த வலியுறுத்தியும், வலி நிவாரணி, கருக்கலைப்பு மருந்துகள், தூக்க மாத்திரைகளை இணையதளம் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரைக் காக்கக் கோரியும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தக் கோரியும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாவட்ட மருந்து வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம்
அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது

மருந்து வணிகா்கள் சங்க கூட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



