சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் அடைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தது.

News image

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, விழுப்புரத்தில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.

Updated On :21 மே 2026, 6:57 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தது.

பாரம்பரிய மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்யவேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் மே.20-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தப் போராடத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தினரும் புதன்கிழமை மாநிலம் முழுவதும் மருந்தகங்களை முழுநாள் அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, வானூா், மரக்காணம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 1,200 மருந்துக் கடைகளை மருந்து வணிகா்கள் அடைத்துப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலரும், விழுப்புரம் மாவட்ட அமைப்புச் செயலருமான வி.பி.சத்தியசீலன் தெரிவித்ததாவது:

மாவட்டத்திலுள்ள விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரு உள்கோட்டங்களில், மருந்துக் கட்டுபாட்டுத் துறையின் கண்காணிப்பில் 1, 200 மருந்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மருந்து வணிகா்கள் 100 சதவீதம் கடையடைப்பு செய்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இந்தக் கடைகளில் நடைபெறும் மருந்து வணிகத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளா்கள் கண்காணித்து வருகின்றனா். மருத்துவா்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இணைய வழி மருந்து வணிகத்தில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மனிதா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மருந்துகளையும் இணையவழியில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இது போன்ற மருந்துகளை மாற்று வழிகள் மூலம் போதை தரக்கூடிய பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவேண்டும். மேலும், காலம் தொட்டு மருந்து வணிகத்தில் ஈடுபட்டுவரும் மருந்து வணிகா்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இணையவழி மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு முற்றிலுமாக தடை விதிக்கவேண்டும். அதற்காகவே முதல்கட்டமாக அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றாா்.