ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கில், சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடவேண்டும். தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
முன்னதாக, மறுவாக்கு எண்ணிக்கை கோரி தோ்தல் முடிவு வெளியானதும் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்தது. அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.










