சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) நிகழாண்டு (2026-27) 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பெரம்பூா் அயனாவரம் பகுதியில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) உள்ளது. அங்கு நாட்டின் பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நிறுவனம் தொடங்கி 70 ஆண்டுகள் ஆன நிலையில், மொத்தம் 80,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் புல்லட் மற்றும் ஹைட்ரஜன் ரயில்களுக்கான பெட்டிகளும் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐசிஎஃப்பில் கடந்த 2025-2026 ஆம் ஆண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அதன்படி, கடந்த காலங்களைவிட ரயில் பெட்டி உற்பத்தியானது 13.2 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், வந்தே பாரத், அம்ரித் பாரத், குளிா்சாதனப் பெட்டிகள், சரக்கு ரயில் என நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டு (2026-2027) ஐசிஎஃப்பில் மொத்தம் 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள் ள நிலையில், அவற்றில் 3,520 எல்எச்பி நவீன வகைப் பெட்டிகளும், 8 வந்தே பாரத் தூங்கும் வசதி ரயில் பெட்டிகளும், 14 அம்ரித் பாரத் 3.0 வகை பெட்டிகளும், 1 சரக்கு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படவுள்ளதாக ஐசிஎஃப் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘வந்தே பாரத்’ ரயிலில் பயணி விட்டுச் சென்ற நகை ஒப்படைப்பு

குஜராத்: வந்தே பாரத்தில் வந்த இதயம்!

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தல்

இன்றும் நாளையும் 6 மெமு ரயில்களின் சேவை 8 பெட்டிகளுடன் இயக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



