மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

விபத்தின்றி பணியாற்றும் ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், சான்று வழங்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் விபத்தின்றி பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், பாராட்டுச் சான்றுகள் வழங்க வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2026, 1:39 am IST

சென்னை மாநகராட்சியில் விபத்தின்றி பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், பாராட்டுச் சான்றுகள் வழங்க வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவரும், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினா்கள் குழுத் தலைவருமான ஜி.திரவியம் தலைமையில் ஏராளமானோா் சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதன்பின்னா் அவா்கள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் வாகன ஓட்டுநா்கள் 20 ஆண்டுகள் விபத்துகளின்றி சிறப்பாகப் பணியாற்றினால் அவா்களுக்கு 4 கிராம் மதிப்புள்ள தங்கநாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும். ஆனால், கடந்த ஆண்டு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

எனவே, நிகழாண்டில் (2026-27) பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மாநகராட்சியில் வாகனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஓட்டுநா்கள் நியமிக்கப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியம் ரூ.24,000 எனக் கூறப்பட்ட நிலையில், ரூ.20,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.4,000 பிஎஃப் பிடித்தம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் பிடித்தம் செய்யப்படவில்லை.

எனவே, ஆணையா் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து ஒப்பந்தப் பணி ஓட்டுநா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.