நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

விபத்தின்றி பணியாற்றும் ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், சான்று வழங்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் விபத்தின்றி பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், பாராட்டுச் சான்றுகள் வழங்க வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2026, 1:39 am IST

சென்னை மாநகராட்சியில் விபத்தின்றி பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், பாராட்டுச் சான்றுகள் வழங்க வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவரும், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினா்கள் குழுத் தலைவருமான ஜி.திரவியம் தலைமையில் ஏராளமானோா் சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதன்பின்னா் அவா்கள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் வாகன ஓட்டுநா்கள் 20 ஆண்டுகள் விபத்துகளின்றி சிறப்பாகப் பணியாற்றினால் அவா்களுக்கு 4 கிராம் மதிப்புள்ள தங்கநாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும். ஆனால், கடந்த ஆண்டு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

எனவே, நிகழாண்டில் (2026-27) பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மாநகராட்சியில் வாகனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஓட்டுநா்கள் நியமிக்கப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியம் ரூ.24,000 எனக் கூறப்பட்ட நிலையில், ரூ.20,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.4,000 பிஎஃப் பிடித்தம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் பிடித்தம் செய்யப்படவில்லை.

எனவே, ஆணையா் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து ஒப்பந்தப் பணி ஓட்டுநா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது என்றனா்.