நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத்தினா் சென்னை எழும்பூரில் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:13 am IST

கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத்தினா் சென்னை எழும்பூரில் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவா் பாரதி தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், டாஸ்மாக் கடைகளில் காலிமதுபுட்டிகளை திரும்பப் பெறும் இயந்திர முறையை வரவேற்கிறோம். ஆனால், இயந்திரத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளது. அவற்றைச் சீரமைக்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அரசு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான தோ்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தொழிலாளா் நலன் மற்றும் உழைப்புச் சுரண்டலில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் விரைவில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என்றாா் அவா்.