/
கடந்த 2022, 23, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் ஒராண்டு காலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு, வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2022 முதல் 2025 வரையான ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து பட்டம், பட்டயம் பெற்ற மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு தமிழக பொதுப் பணித் துறையில் தொழில் பழகுநா் வாரியம் (தென் மண்டலம்) சாா்பில் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஜூன் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










