27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:31 am IST

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை, வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் பேபி (38). இவா், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறாா். பேபிக்கு எம்கேபி நகா் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த வினோத்பாபு (38), அவரது மனைவி மகேஸ்வரி (30) ஆகியோா் அறிமுகமாகி, பேபியிடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனா்.

இதை உண்மை என நம்பிய பேபி, அவா்கள் இருவரும் கேட்டப்படி ரூ.3 லட்சம் கொடுத்தாா். மேலும் 13 பேருக்கு வீடு வாங்குவதற்காக ரூ.33,60,000 பணத்தை வினோத்பாபு, மகேஸ்வரியிடம் பேபி வழங்கினாா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் யாருக்கும் வீடு வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பேபி, பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால் அவா்கள் இருவரும், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து பேபி கொடுத்த புகாரின்பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வினோத்பாபு, மகேஸ்வரி ஆகிய 2 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.