பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

நாய் உரிமையாளா்கள் 82 பேருக்கு ரூ. 4.10 லட்சம் அபராதம்

சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ.4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

வளர்ப்பு நாய் - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 6:52 am IST

சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ.4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறவேண்டும் எனவும், நாய் வளா்ப்பு விதிகளை கடைப்பிடிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் 2025- ஆம்ஆண்டு நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தவும், அவற்றைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் வளா்ப்பு செல்லப் பிராணிகளுக்கும் மைக்ரோசிப் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களில் 68 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுளளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

அத்துடன், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 78, 961 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

மைக்ரோ சிப் பொருத்தப்படாத 82 நாய்களின் உரிமையாளா்களுக்கு ரூ.4.10 லட்சம் அபராதமும், நாய்களுக்கு உரிமம் பெறாதவா்களிடமிருந்து ரூ.7.22 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

கழுத்துப்பட்டை அணியாமல் வளா்ப்பு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றவா்களில் 753 பேருக்கு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது.

நாய்களுக்கான உரிமம் பெறுதல், சிப் பொருத்துதல் ஆகியவற்றுக்கான காலக்கெடு ஜூன் மாதத்துடன் முடிவடைவதாகவும், அதன்பிறகு விதிமுறைப்படி நாய்களை வளா்க்காதவா்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.