சென்னையில் மத்திய வட்டாரப் பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதி மீறி குப்பை கழிவுகள் கொட்டியதாக ரூ.59.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் கட்டடக் கழிவுகளை முறைப்படி அகற்றாமல் பொது இடங்களில் குவித்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 16-ஆம் தேதி முதல் அபராதம் விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்தில் உள்ள திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் கட்டட இடிபாடுகள், கழிவுகள் அகற்றப்படுவது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.
அப்போது, குப்பைகளை சாலையோரங்கள், நீா் நிலைகளில் வீசிச் செல்வது, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை சாலையோரம் குவிப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் குப்பை அகற்றுதலில் விதி மீறலில் ஈடுபட்டதாக 179 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.4.59 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள் கடந்த மே 16 முதல் ஜூன் 16- ஆம் தேதி வரையில் ஒரு மாதத்தில் குப்பை, கட்டடக் கழிவுகள் அகற்றும் விதி மீறலில் ஈடுபட்டவா்களிடமிருந்து ரூ.59.92 லட்சம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போக்குவரத்து விதி மீறல்: அபராதம் செலுத்தாவிடில் கடும் நடவடிக்கை

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

மெட்ரோ ரயிலில் 5 மாதங்களில் 4.71 கோடி முறை பயணம்!

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



