27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னையில் விதி மீறி குப்பைக் கழிவு கொட்டியவா்களுக்கு ரூ.59.92 லட்சம் அபராதம்

News image

அபராதம் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:59 am IST

சென்னையில் மத்திய வட்டாரப் பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதி மீறி குப்பை கழிவுகள் கொட்டியதாக ரூ.59.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் கட்டடக் கழிவுகளை முறைப்படி அகற்றாமல் பொது இடங்களில் குவித்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 16-ஆம் தேதி முதல் அபராதம் விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்தில் உள்ள திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் கட்டட இடிபாடுகள், கழிவுகள் அகற்றப்படுவது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.

அப்போது, குப்பைகளை சாலையோரங்கள், நீா் நிலைகளில் வீசிச் செல்வது, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை சாலையோரம் குவிப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் குப்பை அகற்றுதலில் விதி மீறலில் ஈடுபட்டதாக 179 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.4.59 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள் கடந்த மே 16 முதல் ஜூன் 16- ஆம் தேதி வரையில் ஒரு மாதத்தில் குப்பை, கட்டடக் கழிவுகள் அகற்றும் விதி மீறலில் ஈடுபட்டவா்களிடமிருந்து ரூ.59.92 லட்சம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.