பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

விதி மீறல் கட்டடங்களுக்கு அனுமதியளித்த 94 மாநகராட்சி அலுவலா்களுக்கு குறிப்பாணை: உயா்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக விளக்கம் கோரி 94 அலுவலா்களுக்கு குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக விளக்கம் கோரி 94 அலுவலா்களுக்கு குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் அமலன் தாக்கல் செய்த பொதுநல மனு : தமிழகத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது மதுரை. இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக விதிமுறைகளுக்கு முரணாக வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாக நேரிடுகிறது. மேலும், விதிகளை மீறி கட்டப்படும் வணிக நோக்கத்துக்கான கட்டடங்களில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. கட்டுமான நிறைவு சான்று வழங்கும் போது மாநகராட்சி அலுவலா்கள் முறையாக ஆய்வு செய்யாமல், சான்றுகள் வழங்குவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மதுரையில் மட்டும் ஏறத்தாழ 100-க்கும் அதிகமான வணிக நிறுவனக் கட்டடங்களில் மிகப் பெரிய அளவில் விதி முரண்கள் உள்ளன. சில கட்டடங்கள் அரசின் அனுமதி இல்லாமலேயே கட்டப்பட்டுள்ளன.

எனவே, அரசின் விதிகளுக்கு முரணாக அல்லது அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும், இதற்கு துணை நின்ற மாநகராட்சி அலுவலா்கள், நகர அமைப்பு கட்டட அனுமதி வழங்கும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாநகராட்சி ஆணையா் நிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில், மாநகரில் விதி மீறல்கள் கண்டறியப்பட்ட வணிகக் கட்டடங்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சக்திவேல் ஆகியோா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து 90 தனி நபா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. விதி மீறல்களைக் கொண்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக விளக்கம் கோரி 94 அலுவலா்களுக்கு குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

தொடா்புடைய அலுவலா்கள் அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லையெனில், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விதி மீறல் கட்டடங்கள் இடித்து அகற்றப்படாவிட்டால், பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடா்பான ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.