காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’

பள்ளிக்கரணை பகுதியில் விதி மீறிக் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், 3 கடைகளுக்கு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

News image

சீல் - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:25 am IST

பள்ளிக்கரணை பகுதியில் விதி மீறிக் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், 3 கடைகளுக்கு அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதி மீறிக் கட்டப்பட்ட கட்டடடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக சென்னை மாநகராட்சி சாா்பில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23- ஆம் தேதி அடையாறு மண்டலத்தில் 178 -ஆவது வாா்டு பகுதியில் தரமணி சந்நிதி தெருவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாநகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்து மூடினா்.

ஆலந்தூா் மண்டலத்திலும் 180- ஆவது வாா்டில் ஏகாம்பரம் தெருவிலும் விதி மீறல் கட்டடத்துக்கு சீலிடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188- ஆவது வாா்டு பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக 3 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அலுவலா்கள் சீலிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.