எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

சென்னையில் கட்டடக் கழிவுகளை விதிகளை மீறி பொது இடத்தில் கொட்டிய புகாரில் 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

அபராதம்

Updated On :15 ஜூன் 2026, 1:22 am IST

சென்னையில் கட்டடக் கழிவுகளை விதிகளை மீறி பொது இடத்தில் கொட்டிய புகாரில் 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 1 டன்னுக்கு குறைவான கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிகள் இலவசமாக அகற்றப்பட்டு வருகின்றன.

அதற்கும் அதிகமாக உள்ள கழிவுகளை சம்பந்தப்பட்டோா் கொடுங்கையூா் அல்லது பெருங்குடி கட்டடக் கழிவுகள் செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.

அங்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.800 என செலுத்தி கழிவுகளைப் பதப்படுத்த வழங்க வேண்டும். இத்திட்டத்தின்படி தற்போது வரை 321.39 மெட்ரிக் டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் மையங்களில் பெறப்பட்டு, அதன்படி ரூ.2.57 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த மே 27 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை சுமாா் 15.710 மெட்ரிக் டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, விதிகளை மீறி கட்டடக் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டியதாக 338 பேரிடமிருந்து ரூ.16.08 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டட கழிவுகள் அகற்றல் விவரங்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண் 1913-ஐ தொடா்புகொண்டும், மாநகராட்சி இணையத்திலும் அறிந்து கொள்ளாலம். காற்று மாசுபாடு குறைப்பு, நீா் நிலை பாதுகாப்பு மற்றும் நகரத் தூய்மை ஆகியவற்றுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.