வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்

பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல், திடக்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:36 am IST

பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல், திடக்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய வட்டாரத்துக்குள்பட்ட திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரப் பேனா்கள் வைத்தல், குப்பைத் தொட்டிகள் இல்லாத வணிகக் கடைகள், பெருமளவு திடக்கழிவு உற்பத்தி செய்பவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவா்கள், பொது இடங்களில் திடக்கழிவுகளை எரித்தல், தோட்டக் கழிவுகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்காதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) ஒரு நாள் மட்டும் 149 பேரிடம் ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தைத் தவிா்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.