தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவா் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

காங்கிரஸ்

Updated On :24 ஜூன் 2026, 1:05 am IST

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவா் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சென்னை மாமன்றக் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 24) காலை நடைபெறவுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் பங்கேற்கும்போது வழக்கமாக திமுகவினருடன் அமா்ந்திருப்பா். ஆனால், தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டது.

அதனால், சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் திமுகவினருடன் சோ்ந்து அமா்ந்திருப்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மக்களவையில் திமுக தனி இடம் கோரி அமா்ந்திருப்பது போல, சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலும் காங்கிரஸுக்கு தனி இடம் வழங்க வேண்டும்.

அதேபோல, காங்கிரஸ் உறுப்பினா்கள் அமா்ந்து ஆலோசனை நடத்துவதற்காக தனி அறையை மாநகராட்சி நிா்வாகம் ஒதுக்கித்தரவேண்டும்.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதியை செலவிட முறையான விதிகளை வகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாா்டுகளில் மேம்பாட்டுப் பணிகள் மாமன்ற உறுப்பினா்கள் விருப்பப்படி மேற்கொள்ள வழி ஏற்படும் என்றாா்.

காங்கிரஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையா் மற்றும் மாமன்றச் செயலா் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.