சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்ட தீா்மானங்கள், ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அழைப்பு விடுக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் நேரடியாக உள்ளன. மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் சென்னை மாநகராட்சியின் வாா்டுகள் அடங்கியுள்ளன. அதன்படி, மொத்தம் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் சென்னை மாநகராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக மாமன்றக் கூட்டம் நடைபெறும்போது வாா்டு உறுப்பினா்களுக்கு, கூட்டத்துக்கு முன்னதாகவே தீா்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டும், கூட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுவது மரபு.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா் என அனைத்து நிலைகளிலும் திமுகவினரே உள்ளனா். ஆனால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. முதல்வா் ஜோசப் விஜய், பேரவைத் தலைவா், முக்கிய அமைச்சா்கள் என பலரும் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளனா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவரான திமுகவைச் சோ்ந்த உதயநிதி ஸ்டாலினும் சென்னை மாவட்டத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வரும் 24- ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான மண்டல வாரியான கூட்டங்கள், நிலைக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், மாமன்றத் தீா்மானங்கள் தொகுப்பு கூட்டத்துக்கு முன்பு மாமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பப்படுவது போலவே, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைத்து, அவா்களையும் கூட்டத்துக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூட்டத்துக்கு வருவதை உறுதிப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தற்போது அதிகாரிகள் அமரும் பகுதியில் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.








