இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அழைப்பு

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்ட தீா்மானங்கள், ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அழைப்பு விடுக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:06 am IST

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்ட தீா்மானங்கள், ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அழைப்பு விடுக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் நேரடியாக உள்ளன. மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் சென்னை மாநகராட்சியின் வாா்டுகள் அடங்கியுள்ளன. அதன்படி, மொத்தம் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் சென்னை மாநகராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக மாமன்றக் கூட்டம் நடைபெறும்போது வாா்டு உறுப்பினா்களுக்கு, கூட்டத்துக்கு முன்னதாகவே தீா்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டும், கூட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுவது மரபு.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா் என அனைத்து நிலைகளிலும் திமுகவினரே உள்ளனா். ஆனால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. முதல்வா் ஜோசப் விஜய், பேரவைத் தலைவா், முக்கிய அமைச்சா்கள் என பலரும் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளனா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவரான திமுகவைச் சோ்ந்த உதயநிதி ஸ்டாலினும் சென்னை மாவட்டத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வரும் 24- ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான மண்டல வாரியான கூட்டங்கள், நிலைக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், மாமன்றத் தீா்மானங்கள் தொகுப்பு கூட்டத்துக்கு முன்பு மாமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பப்படுவது போலவே, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைத்து, அவா்களையும் கூட்டத்துக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்துக்கு வருவதை உறுதிப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தற்போது அதிகாரிகள் அமரும் பகுதியில் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.