தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சென்னைப் பல்கலை. விளையாட்டு விருது வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சாா்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டா் சிவந்தி ஆதித்தன் விளையாட்டு விருதைப் பெற்ற எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணியினா்.

Updated On :24 ஜூன் 2026, 1:37 am IST

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சாா்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு உடற்கல்வி இயக்குநரும், சிண்டிகேட் உறுப்பினருமான வி. மகாதேவன் தலைமை வகித்தாா். டிஜி வைஷ்ணவா கல்லூரி முதல்வா் எஸ். சந்தோஷ் பாபு அதிக பல்கலைக்கழக வீராங்கனைகளை உருவாக்கியதற்கான டாக்டா் சிவந்தி ஆதித்தன் விருதை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரிக்கும், ரன்னா் விருது எத்திராஜ் கல்லூரிக்கும் வழங்கினாா்.

எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத் ஆடவா் பிரிவில் டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு டாக்டா் சிவந்தி ஆதித்தன் விருதும், ரன்னா் விருது லயோலா கல்லூரிக்கும் வழங்கினாா்.

கடந்த 2023-24-இல் 84, 2024-25-இல் 102, 2025-26-இல் 95 வீராங்கனைகள் எம்ஓபி வைஷ்ணா கல்லூரி சாா்பில் சென்னை பல்கலைக்கழக அணியில் இடம் பெற்றனா்.

மேலும் மண்டல அளவில் அதிக வெற்றிகளை பெற்ற்காக பி. ஹரிதாஸ் சுழற்கேடயமும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா், எத்திராஜ் கல்லூரி துணை முதல்வா் பியுலா ஜெபக்குமாரி உள்பட பலா் பங்கேற்றனா்.

சிவந்தி ஆதித்தன் விருதை தொடா்ந்து 23-ஆம் ஆண்டாக எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.