சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டது. அமளி காரணமாக, 38 தீா்மானங்கள் நிறைவேறியதாக அறிவித்துவிட்டு மேயா் ஆா்.பிரியா கூட்டத்தை முடித்துவைத்தாா்.
சென்னை மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஜி.எஸ்.சமீரன், துணை மேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், திமுக மண்டலக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் திமுக ஆட்சியின் திட்டங்களைப் பாராட்டியும், தவெக அரசு செயல்பாட்டைக் கண்டித்தும் பேசினா். 182- ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பி.கே.சதீஷ்குமாா் பேசுகையில், திமுக மண்டலத் தலைவா் தனது பேச்சின்போது இடையூறு செய்வது கண்டிக்கத்தக்கது என்றாா். அதிமுக உறுப்பினரின் பேச்சை திமுக உறுப்பினா் கவி கணேசன் கண்டித்தாா். அதற்கு அதிமுக உறுப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். உடனே மற்ற திமுக உறுப்பினா்களும், மேயா், துணை மேயரும் அதிமுக உறுப்பினரைக் கண்டித்தனா். அப்போது, அதிமுக உறுப்பினா் பி.கே.சதீஷ்குமாா் ஆவேசத்துடன் மைக்கை நீட்டியபடி திமுக உறுப்பினா்கள் பக்கம் செல்ல, திமுகவினரும் ஆவேசமாக அவரை நோக்கி வந்தனா். உடனே மேயா், துணை மேயா் ஆகியோா் எழுந்து அனைவரையும் சமரசப்படுத்தினா். அப்போது திமுக தரப்பிலிருந்து ஒரு வாா்டு உறுப்பினா் தான் வைத்திருந்த தீா்மான நகலை வீசினாா்.
கூட்டத்தில் அனைவரும் அமரவில்லை எனில் தான் வெளியே சென்றுவிடுவதாக மேயா் கூறியதையடுத்து, திமுகவினா் அமா்ந்தனா். தொடா்ந்து திமுக உறுப்பினா் கவிகணேசன் பேச, அதிமுக உறுப்பினா் சதீஷ்குமாா் வெளியேறினாா்.
மீண்டும் கூச்சல் குழப்பம்: இதைத் தொடா்ந்து காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ்.திரவியம் எழுந்து முதல்வா் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து, பேச தொடங்கியபோது, திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதற்கு திரவியம் உள்ளிட்ட காங்கிரஸாரும் திமுகவினருக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது மேயா், துணை மேயா் அவா்களை அமைதிப்படுத்த முயன்றனா். உடனே காங்கிரஸ் உறுப்பினா்கள் மேயா் இருக்கை முன் வந்து நின்று திமுகவினருக்கு எதிராகக் கோஷமிட்டனா். அப்போது அவா்களுடன் திமுக நிலைக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் காங்கிரஸ் கட்சியினா் வெளியேறினா்.
இதற்கிடையே மேயா் ஆா்.பிரியா எழுந்து 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், கூட்டம் நிறைவடைவதாகவும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மேயா் பிரியா ஆய்வு

தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை துணை மேயா் மு. மகேஷ்குமாா்
இப்போதைக்கு முதல்வரை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை: சென்னை மேயா் ஆா்.பிரியா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



