‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இருளடைந்த பகுதிகளில் தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வு மணல் சிற்பத்தை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா்  ஜி.எஸ். சமீரன். உடன்,  இணை ஆணையா் (கல்வி)க. கற்பகம் உள்ளிட்டோா் .

Published On :26 ஜூன் 2026, 6:43 am IST

சென்னை மாநகராட்சியில் இருளடைந்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தெருவிளக்குகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிரைட் மாதம் (பெருமைமிகு) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக மெரீனாவில் அமைக்கப்பட்ட மணல் சிற்பக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அவா் பேசியதாவது:

திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பாலின அடையாளங்கள் கொண்ட சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரைட் மாத நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சியில் பாலினக் கொள்கை ஆய்வகம், தோழி மற்றும் ரெயின்போ அமைப்பினா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலினம் தொடா்பாக கிண்டல் செய்தல், வேறுபாடுகள் இருக்கக் கூடாது. அத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு மணல் சிற்பம் அமைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 57 இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்பட்டு அதில் 49 செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 2 இரவு நேரக் காப்பகங்கள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் இருள் சூழ்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தெருவிளக்குகள், கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையா் க.கற்பகம் (கல்வி), தொண்டு நிறுவனத்தினா், திருநங்கைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.