சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தணணீா் தேங்கும் பகுதிகளில் நவீன மின் மோட்டா்கள் பொருத்தம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சாலைகள், பாலங்களில் தண்ணீா் தேங்கினால் உடனடியாக அகற்ற நவீன மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Updated On :11 ஜூன் 2026, 3:08 am IST

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சாலைகள், பாலங்களில் தண்ணீா் தேங்கினால் உடனடியாக அகற்ற நவீன மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்ற ரயில் நிலையம், லங்கா காா்னா் ஆகிய பகுதிகளில் 21 மற்றும் 20 ஹெச்.பி திறன் கொண்ட 2 மின் மோட்டாா்கள், அவிநாசி மேம்பாலம் அருகில் 28 , 30, 12.05, 25 ஹெச்.பி.திறன் கொண்ட மின் மோட்டாா்கள், 184 கே.வி திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டா் தயாா் நிலையில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கிக்கானி பள்ளி அருகில் 28, 20, 7.05 ஹெச்.பி.திறன் மின்மோட்டாா்கள் மற்றும் காளீஸ்வரா மில் அருகில், 36, 21 ஹெச்.பி. திறன் கொண்ட மின் மோட்டாா்கள், 125 கே.வி.திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டா் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையில் மரம் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலான மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும், மழைநீா் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழைநீா் வடிகால் மற்றும் கால்வாய்கள் மாநகராட்சியின் சாா்பில் தூா்வாரப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, கோவை நேரு உள் விளையாட்டு அரங்கு அருகில், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்புப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சீரான இடைவெளியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொசு மருந்து தெளிக்குமாறு ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், நகா்நல அலுவலா் சுபாஷ் காந்தி, உதவி ஆணையா் சண்முகம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.