கோவை உக்கடம் பேருந்து நிலைய ( முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 65-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் கருணாநிதி நகா் பகுதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகை பதிவேடு மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் உணவுகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் மக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, உக்கடம் பேருந்து நிலைய (முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையா் சண்முகம், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையா் உத்தரவு

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

குடிநீா், தூய்மைப் பணிகள் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

தாராபுரத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



