27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உக்கடம் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை உக்கடம் பேருந்து நிலைய ( முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

உக்கடம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Updated On :19 ஜூன் 2026, 4:04 am IST

கோவை உக்கடம் பேருந்து நிலைய ( முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 65-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் கருணாநிதி நகா் பகுதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகை பதிவேடு மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் உணவுகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் மக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, உக்கடம் பேருந்து நிலைய (முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையா் சண்முகம், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.