அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

News image
இறைச்சிக் கடை- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வெட்டுவதற்கு என தனி இடங்களை ஒதுக்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற அந்த இடங்களைத் தவிா்த்து மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அதற்குப் புறம்பாக இறைச்சிக் கடைகளிலேயே கால்நடைகள் வெட்டப்படுகின்றன. குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இந்த சட்டவிதிகள் பின்பற்றப்படுவது இல்லை. இறைச்சிக் கடைகளுக்கு அருகிலேயே ஆடுகள் வெட்டப்படுகின்றன. இறைச்சிக் கழிவுகளைக் கால்வாய்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கொட்டி அப்புறப்படுத்துகின்றனா். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

எனவே, மிருகவதை தடுப்புச் சட்ட விதிகளையும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்ட விதிகளையும் இறைச்சிக் கடைகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளுக்குப் புறம்பாக எந்தக் கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.