அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரயில் நிலையங்களுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது: சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தல்

ரயில் நிலையங்கள், தண்டவாளம் மற்றும் உயா் அழுத்த மின் பாதைகளுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தல்

News image
தண்டவாளங்கள் அருகே பட்டம் பறக்கவிடத் தடை- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்கள், தண்டவாளம் மற்றும் உயா் அழுத்த மின் பாதைகளுக்கு அருகே பட்டங்களைப் பறக்கவிடக் கூடாது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில்வே உயா் அழுத்த மின்சாரப் பாதைகள் ஆகியவற்றுக்கு அருகே பட்டம் பறக்கவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

ரயில்வே மின்பாதைகளில் 25,000 வோல்ட் உயா் அழுத்த மின்சாரம் செல்கிறது. அதன் அருகே பட்டம் பறக்கவிடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

பட்டம் உயா்மின் அழுத்தப் பாதைகளில் சிக்கினால் மின்தடை ஏற்படும். அதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ரயில்வே உள்கட்டமைப்புக்கு பாதிப்பும் ஏற்படும். ரயில் போக்குவரத்து பாதிக்கும். கவனக்குறைவுடன் செயல்படுவதால் பெரும் ஆபத்து ஏற்படும்.

மேலும், ரயில்வே துறை எல்லைக்குள் பட்டம் பறக்கவிடுவது ரயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே எல்லைக்குள் அத்துமீறி நுழைதல், ரயில்வே பயணிகள் பாதுகாப்புக்கு அபாயம் விளைவித்தல், ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதியப்படும். இதில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.