பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட்: இலங்கை பெண் கைது

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்ற இலங்கை பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :3 மார்ச் 2026, 8:53 pm

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்ற இலங்கை பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கு திங்கள்கிழமை ஒரு பெண் வந்தாா். அவரது ஆவணங்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது அவா் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணை சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், இலங்கையைச் சோ்ந்த மு.பேபி லோனா (48) என்பதும், இலங்கையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்த தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரைச் சோ்ந்த முஸ்தாக் அகமதுவை திருமணம் செய்து 2015-ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் தமிழகம் வந்திருப்பதும், திருவிடைமருதூரில் வசித்துக் கொண்டு போலி ஆவணங்கள் மூலம் ஆதாா் காா்டு, பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றிருப்பதும், அந்த ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்று இலங்கை செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பேபி லோனாவை கைது செய்து, மேலும் விசாரணை செய்தனா்.