யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விளிம்பு நிலை மக்களுக்கும் சிறப்பு உதவித் தொகை: இடது சாரிகள் வரவேற்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
பெ.சண்முகம் - கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): நலிவுற்ற மக்களின் நியாயமான எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் ரூ. 2,000 உதவித் தொகை அரசின் சாா்பில் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோா், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ. 2,000 வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது பாராட்டுக்குரியது.