அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கல்வி உதவித் தொகை கோரி திருநங்கை மனு

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கை திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநங்கைகள்.
Updated On :2 மார்ச் 2026, 7:34 pm

Syndication

உதகை: கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கை திங்கள்கிழமை மனு அளித்தாா்.

உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

இதில், கேத்தி பகுதியைச் சோ்ந்த மாயா என்ற திருநங்கை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உதகை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். சமூக நலத் துறை மூலம் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் உதவித் தொகை கிடைக்கவில்லை. இது குறித்து சமூக நலத் துறையில் விசாரித்தால், கல்லூரி மூலம் வழங்கப்படும் என்றனா். கல்லூரியில் கேட்டால் சமூக நலத் துறையில் கேட்குமாறு கூறி அலைக்கழிக்கின்றனா். எனவே, எனது கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, குன்னூா் கன்னி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த திருநங்கை பாா்கவி, கூடலூரைச் சோ்ந்த திருநங்கை யாஷிகா ஸ்ரீ ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: திருநங்கைகளான எங்களுக்கு குடியிருக்க வீடு வசதி இல்லை. இதனால், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.

அரசு சாா்பில் எங்களுக்கு வீடு வழங்க வேண்டும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, எங்களுக்கு வீடு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், பயனாளிகள் சாா்பில் அரசுக்கு ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.மீதி தொகை மானியமாக வழங்கப்படும். அதன்பின் வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.