கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

உதகை அருகேயுள்ள 6-ஆவது மைல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது மைல் பகுதி மக்கள்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:43 pm

Syndication

உதகை: உதகை அருகேயுள்ள 6-ஆவது மைல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது மைல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த குழாய் சேதமடைந்துள்ள நிலையில், அதை சரி செய்யாததால் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால், நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீா் எடுத்து வருகிறோம்.

இது குறித்து பாலகொலா ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தோம்.

ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மீண்டும் மனு அளித்துள்ளோம். விரைவில் குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.