அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், விசிக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிகழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், விசிக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிகழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) மாநில செயலா் பழ. ஆசைத் தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்து தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்தவேண்டும். இந்திய அரசு தலையீட்டு போரை நிறுத்த வேண்டும். மத்திய அமைச்சரவையைக் கூட்டி போா் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீா்மான நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களிடம் தொல்.திருமாவளன் கூறியதாவது:

ஈரான் மீதான தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். போா் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அங்கு உள்ளவா்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை வேண்டும் என்றாா் அவா்.