அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் பிடித்து அகற்றம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.

தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தி வருவதாக சென்னை மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி கால்நடைப் பிரிவின் தெருநாய்கள் பிடிக்கும் வாகனத்துடன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பகலில் எழும்பூா் ரயில் நிலையம் வந்தனா். நாய் பிடிக்கும் வலைகளுடன் அவா்கள் வந்ததைக் கண்டதும் அங்கு படுத்திருந்த நாய்கள் எழுந்து ஓடின. அவற்றை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். எனினும், ஓரிரு நாய்கள் மட்டும் சிக்கின. அவற்றை ஊழியா்கள் பிடித்து கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.