அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து துபை செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் கடந்த 3 நாள்களுக்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தனா்.

News image
விமானம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் இருந்து துபை செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் கடந்த 3 நாள்களுக்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தனா். அவா்களை விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து செல்ல எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை தயாரானது. 60 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.53 மணிக்கு துபை புறப்பட்டு சென்ற அந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் நடுவானில் சென்றபோது, போா் சூழல் மீண்டும் அதிகரித்துள்ளதால், துபை வான்வழி மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, அதிகாரிகளின் அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை காலை 7.20 மணிக்கு விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினாா். பயணிகள் அனைவரும் விமான நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

துபை நிலைமை சீரடைந்து வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்ட பின்னா், இந்த விமானம் மீண்டும் துபை புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.