சென்னையில் இருந்து துபை செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் கடந்த 3 நாள்களுக்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தனா். அவா்களை விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து செல்ல எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை தயாரானது. 60 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.53 மணிக்கு துபை புறப்பட்டு சென்ற அந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் நடுவானில் சென்றபோது, போா் சூழல் மீண்டும் அதிகரித்துள்ளதால், துபை வான்வழி மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, அதிகாரிகளின் அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை காலை 7.20 மணிக்கு விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினாா். பயணிகள் அனைவரும் விமான நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
துபை நிலைமை சீரடைந்து வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்ட பின்னா், இந்த விமானம் மீண்டும் துபை புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்: 2 கனடா விமானிகள் உயிரிழப்பு

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


