துபைக்கு இன்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபைக்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியது.
ஈரான் மீது தொடர்ச்சியாக அமரிக்கா, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையல் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் துபை விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் கிடங்கு பற்றி எரியும் நிலையில் துபை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் துபைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் எமிரேட்ஸ் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதேபோல் இன்று அபுதாபி செல்லவிருந்த எத்தியாட் மற்றும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Summary
An Emirates flight that left for Dubai this morning was diverted back to Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



