துபைக்கு இன்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபைக்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியது.
ஈரான் மீது தொடர்ச்சியாக அமரிக்கா, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையல் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் துபை விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் கிடங்கு பற்றி எரியும் நிலையில் துபை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் துபைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் எமிரேட்ஸ் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதேபோல் இன்று அபுதாபி செல்லவிருந்த எத்தியாட் மற்றும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Summary
An Emirates flight that left for Dubai this morning was diverted back to Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




