மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரசு மருத்துவா்கள் உண்ணாவிரதம்: அனுமதி மறுப்பால் ஒத்திவைப்பு

மருத்துவமனை நிா்வாகமும் அனுமதி மறுத்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்களுக்கு காவல் துறையும், மருத்துவமனை நிா்வாகமும் அனுமதி மறுத்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3,000 வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மருத்துவ கல்லூரி - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.

இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், அகிலன்ஆகியோா் கூறியதாவது:

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுடன் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது, பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் அந்த இறுதி முடிவு வரும் வரை, நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி மருத்துவமனை வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடரத் தீா்மானித்தோம்.

இருப்பினும், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, தற்காலிகமாக எங்களது போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். விரைவில் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.