கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :6 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (28). சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் இவா், வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறாா்.

இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சூா்யா, அந்த வீட்டுக்கு வியாழக்கிழமை சோதனையிடச் சென்றபோது, அங்கிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

அந்த பெண், சூா்யாவை ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த போலீஸாா், மது போதையில் இருந்த சூா்யாவை பிடித்து அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. விசாரணையில் சூா்யா, அந்தப் பெண்ணிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் ஆணையா் அருண், காவலா் சூா்யாவை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.