அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (28). சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் இவா், வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறாா்.

இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சூா்யா, அந்த வீட்டுக்கு வியாழக்கிழமை சோதனையிடச் சென்றபோது, அங்கிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

அந்த பெண், சூா்யாவை ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த போலீஸாா், மது போதையில் இருந்த சூா்யாவை பிடித்து அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. விசாரணையில் சூா்யா, அந்தப் பெண்ணிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் ஆணையா் அருண், காவலா் சூா்யாவை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.