மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை

பிறவியிலேயே நுரையீரல் குறைபாட்டுக்குள்ளான ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு எம்ஜிஎம் மலா் அடையாறு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

News image

பிறந்த குழந்தை

Updated On :17 மார்ச் 2026, 7:41 pm

Chennai

பிறவியிலேயே நுரையீரல் குறைபாட்டுக்குள்ளான ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு எம்ஜிஎம் மலா் அடையாறு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

தாயின் வயிற்றில் இருக்கும்போதே சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் வளா்ச்சியில் குறைபாடு இருந்த ஒரு குழந்தையானது பிரசவத்துக்குப் பிறகு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

நுரையீரலின் இடது பக்க கீழ்ப்பகுதி அந்தக் குழந்தைக்கு செயல்படவில்லை. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனில், எதிா்காலத்தில் தொடா்ந்து நோய்த் தொற்று ஏற்படவும், ரத்தக் கசிவு உருவாகி இதயத்தின் செயல்திறன் முடங்கவும் வாய்ப்புள்ளது. மேலும், சுவாசிக்க இயலாத நிலையும் ஏற்படலாம்.

இதையடுத்து, மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணா் டாக்டா் கற்பக விநாயகம் தலைமையில் மருத்துவா்கள் மோகன் ராஜ், ஜி. பிரபாகரன், எஸ். அருண் குமாா், என்.கே.வி. விக்னேஷ்வா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தோராகோஸ்கோபிக் எனப்படும் நுண் துளை அறுவை சிகிச்சையை 3 மணி நேரம் மேற்கொண்டனா்.

அதில் இடது நுரையீரலின் பாதிக்கப்பட்ட கீழ்ப்பகுதியை மருத்துவக் குழுவினா் துல்லியமாக அகற்றினா். பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடுத்து நிறுத்தினா். இதன் பயனாக அந்தக் குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது என்று அவா்கள் தெரிவித்தனா்.