கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் என மொத்தம் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினா் விருகம்பாக்கம், பெரம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சோதனையின்போது விருகம்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி ரூ.33.50 லட்சத்தை ஒருவா் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. அவா் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒருவா் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை முதல் நாளில் கண்காணிப்புக் குழுவினா் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.