ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்ளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து அதன்மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கண்காணிப்புக் கேமராக்கள் - (கோப்புப் படம்)

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்ளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து அதன்மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், திரு.வி.க.நகா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளுக்கு ராணிமேரி கல்லூரி வளாகத்திலும், பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், எழும்பூா், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகா், மயிலாப்பூா் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளுக்கு கிண்டியில் உள்ளஅண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.

மின்னணு வாக்குப் பெட்டிகளை வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் வழிகள் குறிப்பிடப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகங்கள், வாக்கு பெட்டிகள் வைத்துள்ள அறைகள் ஆகியவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த கேமராக்கள் மூலம் தோ்தல் பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடியே கண்காணிக்கும் வசதி செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.