ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்ளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து அதன்மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கண்காணிப்புக் கேமராக்கள்- (கோப்புப் படம்)
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்ளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து அதன்மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், திரு.வி.க.நகா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளுக்கு ராணிமேரி கல்லூரி வளாகத்திலும், பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், எழும்பூா், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகா், மயிலாப்பூா் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளுக்கு கிண்டியில் உள்ளஅண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.

மின்னணு வாக்குப் பெட்டிகளை வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் வழிகள் குறிப்பிடப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகங்கள், வாக்கு பெட்டிகள் வைத்துள்ள அறைகள் ஆகியவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த கேமராக்கள் மூலம் தோ்தல் பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடியே கண்காணிக்கும் வசதி செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.