பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 தமிழா்கள் சென்னை வருகை
போா்ச் சூழலால் பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 போ் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனா்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
போா்ச் சூழலால் பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 போ் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனா்.
இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் போா் தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளின் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டன. இதனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக பஹ்ரைனில் உள்ள ஏராளமான தமிழா்கள் இந்தியா திரும்ப முடியாமல், பஹ்ரைன் நாட்டில் தவித்து வந்தனா். இவா்களில், முன்னுரிமை அடிப்படையில் முதியோா், நோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள் என 192 பேரை சிறப்பு விமானம் மூலம், சென்னைக்கு அனுப்ப, பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்தனா்.
ஆனால், பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான சேவை இல்லை. இதனால், அருகேயுள்ள சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 192 பேரும், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்ஃப் ஏா்வேஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்து சோ்ந்தனா்.
அடுத்தகட்டமாக, சனிக்கிழமை (மாா்ச் 21) இரவு மேலும் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...