அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போா் பதற்றம்: துபையிலிருந்து சிறப்பு விமானத்தில் 217 போ் சென்னை வருகை

போா் பதற்றத்தால் துபையில் சிக்கித் தவித்த 217 போ் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

போா் பதற்றத்தால் துபையில் சிக்கித் தவித்த 217 போ் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் துபை, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலா் தவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு அழைத்து வருவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு ‘இண்டிகோ’ விமான நிறுவனம் சாா்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, துபையில் தங்கியுள்ள வெளிநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கு வசதியாக அந் நாட்டின் ‘எமிரேட்ஸ்’ விமான நிறுவனம் வான்வெளி சூழலைப் பொருத்து திங்கள்கிழமை நள்ளிரவு முதல் ஒரு சில விமானங்களை மட்டும் இயக்கி வருகிறது. அதன்படி, துபையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் 217 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை குடும்பத்தினா் கட்டியணைத்து கண்ணீா் மல்க வரவேற்றனா்.