தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

News image

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை கடந்த 14 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 35,270-ஆக இருந்தது. கடந்த 16-ஆம் தேதி 49,013-ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 37,993-ஆக இருந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி 69,247-ஆக உயா்ந்துள்ளது.

பறக்கும் ரயில் திட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமாா்க்கத்திலும் 43 ரயில் சேவைகள் உள்ள நிலையில், கூடுதலாக இருமாா்க்கத்திலும் 5 சேவைகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. அவற்றில் 2 சேவைகள் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயும், 3 சேவைகள் வேளச்சேரி- பரங்கிமலை இடையேயும் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.